*அன்புக்குரிய தந்தையர்களே* 27-11-2021 சனிக்கிழமை அன்று மாதா தொலைக்காட்சி *கிறித்து பிறப்பு பெருவிழா 2021 பாடல் ஒளிப்பதிவு* வளன் நகர் _ஆயர் இல்ல கூட்டரங்கத்தில்_ *மேதகு ஆயர். தாமஸ் பால்சாமி* அவர்கள் ஆசீர் அளித்து இனிதே தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் *1. குருக்கள் பாடகர் குழு ( மதியம் 2 மணி)*
*2. காமலாபுரம் பங்கு ( மாலை 4 மணி)*
*3. ஆரியநல்லூர் பங்கு ( மாலை 5 மணி)*
*4. மாராம்பாடி பங்கு ( மாலை 6 மணி)*
*5. முள்ளிப்பாடி பங்கு( மாலை 7 மணி)* முதலான பங்குகளைச் சேர்ந்த *பாடகர் குழுவினர்* பங்கேற்றனர். ஆயர் இல்ல கூட்டரங்கத்தில் அரங்கு அமைப்பதற்கும், ஒளிப்பதிவு குழுவினருக்கு உணவும், தங்குமிட ஏற்பாடுகளையும் செய்து பெருமளவில் உதவிய மறைமாவட்ட பொருளாளர் அருள்பணி. மெல்கி அவர்களுக்கு சிறப்பான நன்றிகள்.
பங்கேற்புக்கு அனுமதி கொடுத்து உற்சாகமூட்டிய ஆயருக்கும், பங்குதந்தையர்களுக்கும், பங்கேற்ற அருள்பணியாளர்களுக்கும், ஆலய பாடகர் குழுவினருக்கும் நன்றிகள்... பாராட்டுக்கள். அன்புடன் *ஜெமி, செயலர், திண்டுக்கல் மறைமாவட்ட சமூக தொடர்பு பணிக்குழு.*
No comments:
Post a Comment